<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22558008</id><updated>2011-04-21T19:42:14.142-07:00</updated><title type='text'>உதயா ரசிகன்</title><subtitle type='html'>இசையமைப்பாளர் உதயாவின் 
கலைப் பயணத்தின் நிகழ்வுகளும், பதிவுகளும்...பார்வைகளும்...பாடல்களும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://udhayaarasigan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://udhayaarasigan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>UDHAYAA RASIGAN</name><uri>http://www.blogger.com/profile/09236030318990628387</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22558008.post-114036242161053080</id><published>2006-02-19T07:14:00.000-08:00</published><updated>2006-03-08T01:14:50.130-08:00</updated><title type='text'>உதயாவின் இசை வார்ப்பில் உருவாகும் 'காதல் கடிதம் '</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;உதயாவின் இசை வார்ப்பில் உருவாகும் 'காதல் கடிதம் '&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/4zzz.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/5x8_15.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/5x8_15.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/7ttttt.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/7ttttt.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/1khl.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/1khl.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த உண்மையை உணர்ந்து காதல் கடிதம் திரைப்படக்குழுவினர் செயற்;பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த காதல் கடிதம் இசைத்தொகுப்பு அமைந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்பொழுது உலகத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இசைத்தொகுப்பில் இருந்து ஒர் திரைப்படமென காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காதல் கடிதம் இசைத்தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்தொகுப்பும் வெளிவர இருக்கின்ற வேளையில் காதல் கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்வோம். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடும், தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த தேர்ந்த கலைஞர்களின் ஆதரவோடும், இத்திரைப்படத்தை உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத் திரைப்படத்தின் தயாரிப்பிற்காக கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நானும் வசீகரனும் காத்திருந்தோம். இப்பொழுது ஒரு நல்ல இளம் தயாரிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியில், அவரே முழுத் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்க தொடங்கிவிட்டோம் என்கிறார் படப்பிடிப்புத் தளத்தில் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடந்த 14.12.2005 அன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 21.12.2005 முதல் இலங்கையில் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத் திரைப்படத்தை Water Falls Movie Makers நிறுவனர் T.தில்லைவண்ணன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ்த் திரைப்படக் கூட்டுத்தாபனமும் இவருக்கு தங்களால் ஆன முழு உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்தக் காதல் கடிதம் படப்பிடிப்பின் முக்கிய விடயமாக உலகத் தமிழர்களின் காதுகளைக் கொள்ளையடித்த 'யாழ்தேவியில் காதல் செய்தால்" பாடல் யாழ். தேவி தொடரூந்திலேயே மூன்று நாட்களுக்கு மேலாகப் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;இந்தப் படப்பிடிப்பின் போது நு}ற்றுக்கும் அதிகாமான எமது மக்கள் சக்தி வானொலியூடாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ். தேவி தொடரூந்தில் பயணிப்பது போன்று படமாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலை உயிரோட்டமாகப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்ட சாம்.பி.கீர்த்தன் அவர்களே பாடி நடித்தது இந்தப் படத்திற்கு மேலும் சிறப்பூட்டுகிறது. இந்தப் பாடலுக்கான முழுமையான அனுசரனையை வழங்கி, திறந்த மனதோடு காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக்தி வானொலி மற்றும் சக்தி தொலைகாட்சியினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தில் இடம் பெற இருக்கும் ஆறு பாடல்களில் 'ஈழப்பெண்ணே ஈழப்பெண்ணே", 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே", 'எழுது எழுது என் அன்பே", 'யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை", ஆகிய பாடல்கள் இலங்கை முழுவதும் உள்ள எழில் கொஞ்சும் இயற்கைத் தாயின் மடியில் படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், படம்பிடிக்கப்பட்டு, வவுனியாவில் இத்தரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது .....வவுனியாவில் வாழ்கின்ற தமிழ்; மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்தும் வகையில் இக்காட்சி படமாக்கப் பட்டது மறக்கமுடியாது என்கிறார் காதல் கடிதம் திரைப்படக் குழுவில் பணியாற்றும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழரின் வாழ்வியலை அவர்களின் வளமான குடும்ப வாழ்க்கையை, ஒரு பிள்ளைக்கு காதல் வந்தால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை, எங்கள் கலை கலாச்சார பண்பாட்டுத் தன்மைகள் சிதையாத வகையில் அழகிய திரைக்காவியமாக வெளிக் கொண்டுவரும் கடிதம்தான் காதல் கடிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஐp கதாநாயகனாக அறிமுகமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கதையின் தரம் கருதி இருவரும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருக்கிறர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://imageshack.us/"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத்திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் உருவாக்கியே தீருவேன் என உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் முன்வந்த இளைய தயாரிப்பாளர் வு.தில்லைவண்ணன் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இப்படத்தின் இயக்குனர் திரு.முகேஷ் அவர்களுக்கும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கும் திருப்தி தரும் வகையில் தயாரிப்புச் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாரதி கண்ணம்மா முதல் ஆட்டோக்கிராப் திரைப்படம் வரை 'தவமாய்த் தவமிருந்து" திரையில் ஓர் நாவல் தந்த இயக்குனர் சேரனிடன் உதவி இயக்குனராகப் பணியாhற்றிய திரு.முகேஷ் அவர்கள் திருமதி.வினோலியா நீதிதேவன் அவர்களின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி மிகவும், அழகாக நெறியாள்கை செய்து கொண்டிருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காதல் கடிதம் இசைத்தொகுப்பின் மூலம் தனது உன்னதமான இசையை பாடல்களுக்கு வழங்கி, பின்னணி இசையினை வழங்கவும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு மிகவும் பக்கபலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;திரைப்படக் கல்லுரியில் படித்துப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, தங்கப் பதக்கம் வென்று தன் புதுமையான ஒளிப்பதிவில் கண்ணுக்குக் குளிர்மையான காட்சிகளை கவிதையாக தந்து கொண்டிருக்கிறார் டீ.சு.ராஐன் அவர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் முதல் முறையாக புலம்பெயர்ந்து நோர்வே மண்ணில் வாழ்கின்ற வசீகரன் அவர்கள் எழுதியிருக்கின்றார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இப்படி எல்லாமே புதிய, இளைய முகங்களின் அறிமுகங்களோடு உங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான பிரபல தென்னிந்திய நடிகர்களும் காதல் கடிதம் திரைப்படத்தில் இணைகின்றார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நடிப்பில் கலக்கப் போகும், உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், ராசி அழகப்பன், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ..மனோகரன். எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தொழில்நுட்பக் கலைஞர்கள்: தயாரிப்பு: வு.தில்லைவண்ணன் மூலக்கதை: வினோலியா திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ் ஒளிப்பதிவு: .ராஐன் இசை: வி.எஸ்.உதயா பாடல்கள்: வசீகரன் (நோர்வே) கலை: கலைராஐ; நடனம்: காதல் படப் புகழ் கந்தாஸ், மன்மதராசா பாடல் புகழ் சிவசங்கர் படத்தொகுப்பு: வாசு சலிம் நிழற்ப்படம்: சிற்றரசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;திரைப்படத்தில் பணியாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் இலங்கைக் கலைஞர்கள், தொழிநுட்பக் கலைஞர்கள், மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் இந்தக் 'காதல் கடிதம்" திரைப்படத்தினூடக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ மாசி மாதம் வரை காத்திருங்கள். காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர். நன்றி- 'குமிழி'&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22558008-114036242161053080?l=udhayaarasigan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udhayaarasigan.blogspot.com/feeds/114036242161053080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22558008&amp;postID=114036242161053080&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114036242161053080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114036242161053080'/><link rel='alternate' type='text/html' href='http://udhayaarasigan.blogspot.com/2006/02/blog-post_19.html' title='உதயாவின் இசை வார்ப்பில் உருவாகும் &apos;காதல் கடிதம் &apos;'/><author><name>UDHAYAA RASIGAN</name><uri>http://www.blogger.com/profile/09236030318990628387</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22558008.post-114015063926485516</id><published>2006-02-16T20:29:00.000-08:00</published><updated>2006-03-08T23:34:38.716-08:00</updated><title type='text'>உதயா ...உள்ளத்தின் அலைகள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/09070702.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/09070702.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்கள் இலக்கு ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;காலத்தை வென்று வாழும் இசைப்படைப்புகளை வழங்குவது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குருவாக நினைப்பது ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இசைத் துறையில் ஒவ்வொருவரிடமும் மற்றவரிடம் இல்லாத பல தனித்தன்மைகள் இருக்கலாம். அந்தத் தனித்தன்மைகளை அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன் என்ற விதத்தில் அவர்களில் பலர் எனது குரு ஆகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அதுமட்டுமல்ல எனக்கு வாத்தியம் வாசிக்கின்ற கலைஞர்கள், என் உதவியாளர்கள், என் சவுண்ட் இன்ஜினியர்° இவர்களிடமும் பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளுகிறேன் என்பதால் இவர்களும் எனது குருவே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மிகவும் உயர்வாக நினைப்பது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் தாய் தந்தையரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதல் திருப்புமுனைக்கு காரணமானவர் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் கலைத்திறனை இனங்கண்டு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்த என் கல்லூரி அதிபர் திரு. ராஜன் கதிர்காமர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்கள் முதல் விமர்சகர் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் மனைவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாதனையாக நினைப்பது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மிகப் பெரிய சங்கீதப் பாரம்பரியத்திலிருந்து வராமல் கேள்வி ஞானத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இசையமைக்க வந்த என்னை - சுவிட்சர்லாந்தில் உள்ள ரெமி ரெக்கார்டு தன் கம்பெனிக்கு இசையமைப்பாளராக்கியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சோதனையாக நினைப்பது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நல்ல சங்கீதத்தை வழங்கியும் சில சமயங்களில் அது ரசிகர்களைப் போய்ச் சேராதபோது.இசை உலகில் 22 வருடங்கள் பல எதிர்நீச்சல்கள் போட்டு அயராது முயற்சித்தும் அங்கீகாரம் கிடைக்க மிகத் தாமதமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்கள் சந்தித்து ஆசை தீரப் பேச விரும்புவது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இசைஞானி இளையராஜாவுடன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடிக்கடி கேட்க விரும்பும் பழைய பாடல் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து என்ற பாடல் (படம் - புதிய பறவை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இளையராஜாவின் இசையில் அடிக்கடி கேட்ட பாடல் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பன்னீர்புஷ்பங்கள் படத்தில் எ°.பி.பி. ஜானகி பாடிய, பூந்தளிர் ஆட...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாதித்த மேலைத்தேச இசையமைப்பாளர் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஜேம்° ஹார்னர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நன்றி சொல்ல வேண்டும் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;...முதலில் இறைவனுக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அடுத்து பெற்றோருக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பல பொருளாதார நெருக்கடிகளிலும், இன்னல்களிலும் என் இசையை மட்டும் நேசிக்கும் என் மனைவிக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் இசை - கவிதோழர்கள் ... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என்னோடு என்றும் எப்போதும் தோள் கொடுக்கும் என் இசைக் கலைஞர்கள் என்று இந்த பாசப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சின்ன வயதில் உங்களை ஒரு நல்ல ரசிகனாக உருவாக்கியவை ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எங்கள் வீட்டில் உயர்ந்த °தானத்தில் இருந்த பொன்னு கிராம போன் பெட்டி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எங்கள் ஊர் அம்மன் கோயில் திருவிழாக்களில் கண்ணன் கோஷ்டி மற்றும் அருணா, ராஜன் இசைக் குழுக்கள் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சிகள், சின்ன மணி அவர்களின் நவரசம் ததும்பும் வில்லுப்பாட்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இலங்கை வானொலி சொன்ன இசையும் - கதையும். அது தேடிப்பிடித்து ஒலிபரப்பிய தரமான தமிழ்ப்பாடல்கள். உற்சாகமான அறிவிப்பு பாணியுடன் திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பாடல்கள் பாடிய பாடகர்களிடமே இல்லாத பல அபூர்வ இசைத் தட்டுகளைக் கூட சேகரித்து வைத்திருந்து... துல்லியமான இசைப் பதிவு செய்து இசைத் தொண்டாற்றிய விக்டர் அன்ட் சன்° மற்றும், நியூ விக்டர்° நிறுவனங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பெருமைப்பட்டது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாகாவரம் பெற்ற சங்கீதங்களைப் படைத்த மெல்லிசை மனனர் எம்.எ°. விசுவநாதன் அவர்களும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களும் இணைந்து சமீபத்தில் என் இசையமைப்பில் இனிய காதலர்களே என்ற இசை ஆல்பத்துக்கு பாடியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;------- ------ --------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;உதயாவின் இசை வார்ப்பில் உருவான பாடல் பொக்கிஷங்கள்.....இவை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;கேட்டு ரசிப்போமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.oosai.com/tamilsongs/kadhal_kaditham_songs.cfm"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'காதல் கடிதம்' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.oosai.com/tamilsongs/kanden_seethiyai_songs.cfm"&gt;&lt;span style="color:#336666;"&gt;உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'கண்டேன் சீதையை'' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#336666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/l/26/m/singer.3923"&gt;&lt;span style="color:#993399;"&gt;உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'உறவுக்கு மரியாதை'' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.oosai.com/tamilsongs/en_iniya_kathalargale_songs.cfm"&gt;&lt;span style="color:#996633;"&gt;உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'இனிய காதலர்களே' இசை ஆல்பத்தின் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------ ------ -------- --&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://thoduppukal.blogspot.com"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உதயாவின் புகைப்படத் தோரணங்கள்..... இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt; &lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-------- ------ -----&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hinduonnet.com/thehindu/2001/05/07/stories/09070702.htm"&gt;&lt;span style="color:#006600;"&gt;'இந்து' [ HINDU] ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hinduonnet.com/thehindu/2001/05/07/stories/09070702.htm"&gt;&lt;span style="color:#006600;"&gt;உதயாவின் சிறப்புப் பேட்டியைப் படிக்க...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hinduonnet.com/thehindu/2001/05/07/stories/09070702.htm"&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;span style="color:#006600;"&gt;இங்கே சொடுக்குங்கள்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22558008-114015063926485516?l=udhayaarasigan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udhayaarasigan.blogspot.com/feeds/114015063926485516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22558008&amp;postID=114015063926485516&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114015063926485516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114015063926485516'/><link rel='alternate' type='text/html' href='http://udhayaarasigan.blogspot.com/2006/02/blog-post_114015063926485516.html' title='உதயா ...உள்ளத்தின் அலைகள்'/><author><name>UDHAYAA RASIGAN</name><uri>http://www.blogger.com/profile/09236030318990628387</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22558008.post-114014715543027880</id><published>2006-02-16T19:10:00.001-08:00</published><updated>2006-02-18T02:06:34.713-08:00</updated><title type='text'>இசையமைப்பாளர் உதயா...அப்துல் ஹமீது...சந்திப்பு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/kkkkk.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/kkkkk.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/udaya1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4698/2295/320/udaya1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4698/2295/1600/gitarre.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'... இலங்கைத் தமிழ் நெஞ்சங்களின் கலாச்சார பிரதிபலிப்பை வெளிக்கொணரும் ஒரு ஊடகமாக இலங்கை வானொலி பணிபுரிந்திருக்கின்றது என்றால் அதில் மிகையன்று.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு நமது காயங்களுக்குக் கூட மருந்திட்டுச் சென்றிருக்கின்றது இலங்கை வானொலி.&lt;br /&gt;&lt;br /&gt;காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் பள்ளிக்கூடம் பள்ளிமுடிந்தவுடன் டியூஷன் பரீட்சை முடிந்தவுடன் பொறியியலாளர், கணக்கர், வைத்தியர், வக்கீல், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வாழ்க்கை என ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று சொந்தமாய் அதிக படைப்புகளை உருவாக்கவும் உணர்ந்து கொள்ளவும் நேரமற்றுப் போன ஒரு சமுதாயத்தின் மத்தியிலும் பல எழுச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றது இலங்கை வானொலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலி என்ற பெருமையைப் பெற்றதும், உலகத்தமிழ் ரசிக நெஞ்சங்களை வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் இழுத்து வந்து குழுமியிருக்கச் செய்ததும் இலங்கை வானொலி என்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ரசிகனின் வாழ்வில் ஒன்றிப்போனது இலங்கை வானொலி.&lt;br /&gt;&lt;br /&gt;காலைக் கதிரில் துயிலெழுப்பி... அந்தநாள் ஞாபகங்களை சுருதி மீட்டி... பொங்கும் பூம்புனலாய் பரவசப்படுத்தி... இரவின் மடியில் நாம் தலை சாய்க்கும் வரை நமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலி....'&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் இசையமைப்பாளர் உதயா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;இத்தகைய சிறப்புப் பெற்ற இலங்கை வானொலியில் ஏறக்குறைய 35 ஆண்டுகள் அறிவிப்பாளராக பணி புரிந்து தமிழ் கூறும் நல்லுலகெங்கும் செம்மையான தமிழ் உச்சரிப்பாலும், வசீகரமான பேச்சினாலும் ரசிக நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை ரசிகன் இணைய சஞ்சிகைக்காக உதயா அவர்கள் சந்தித்து அளவளாவிய பழைய நிகழ்வின் பதிவு இங்கே...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவர் நமது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட அறிவிப்பாளர் மட்டுமல்ல... நாடகாசிரியர், இயக்குனர், நடிகர், இன மத மொழி பேதங்களைக் கடந்த ஒரு நல்ல ரசிகர். அத்தோடு படைப்பாளிகள் நல்லஒழுக்கசீலர்களாய்இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மனிதர் என இவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்...... இதோ அவர் வழங்கிய செவ்வி .&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;உதயா ; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பாட்டுக்குப்பாட்டு என்ற இலைமறைகாயாக இருக்கும் கலைஞர்களை இனம் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியின் பிதாமகர் நீங்கள். இலங்கை வானொலியில் உருவாகி வெற்றிக் கொடி கட்டிய இந் நிகழ்ச்சியை தனியார் தொலைக் காட்சிகளும் கூட பிற இந்திய மொழிகளிலும் தத்தெடுத்துக் கொண்டன.இதன் வெற்றியைப் பார்த்து அதை படைத்த ஒரு தாயின் பெருமிதத்தோடு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்?....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் ஹமீது - இந்த நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் ஆரம்பித்து சுமார் 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்குள்ளே ஒரு மனக்குறை இருந்து வந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் ஒரு அப்துல் ஹமீதை இனங்காண்கிறார்கள் என்பதை என்னை குறைத்து மதிப்பிடுவதைப்போல எண்ணினேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காரணம்... இலங்கை வானொலியில் வயதில் மிகக் குறைந்த அறிவிப்பாளனாக மிக இளம் வயதிலேயே இணைந்த போதே வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்றுவிடாமல் ஒலிபரப்பிலே உள்ள பல துறைகளையும் கற்றுணரn வண்டும் என்ற உந்துதல் அந்த வயதிலேயே இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆகவே நான் இலக்கியத் துறை சார்ந்த சஞ்சிகை நிகழ்ச்சிகள், பொது அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், செய்தித் தொகுப்புகள், நான் இயக்கிய மிகச் சிறந்த நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் இருக்கும் போது இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியால் மட்டுமே என்னை அடையாளம் காண்கிறார்களே என்ற மனக்குறைதான் அது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்தப் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை ஏன் ஆரம்பித்தேன் .என்றால் அன்று நானே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலைப்பளுவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காகவே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இரண்டே இரண்டு கலைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் பாடகர்களான வி. முத்தழகு, கலாவதி சின்னச்சாமி ஆகியோர்களுடன் இந்நிகழ்ச்சியை பரீட்சார்த்தமாக முயற்சித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குளியலறை சங்கீத ஞானம் கொண்டவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்காக நான் தயாரித்த இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் விளம்பாதாரர்களும் மனமுவந்து உற்சாக வரவேற்பளித்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதன் பிறகு பல பாகங்களுக்கும் சென்று கலைஞர்களை நேரடியாக சந்தித்து இந்த நிகழ்ச்சியை ரசிகர்களை வெகுவாகக் கவரும் நிகழ்ச்சியாக மாற்றினேன்.ஆனால் தமிழகத்திலும் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடையும் என்று நான் நினைக்கவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பல தனியார் தொலைக் காட்சிகள் இந்தியாவில்ஆரம்பிக்கப்பட்டன. அதில் இந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை அந்தாக்ஷரி, பாடுவோர் பாடலாம் என்று பல பெயர்களில் புகழ் பெற்ற பாடகர்களைக் கொண்டே முயன்றார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவ்வேளையில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தவரை வைத்தேநடத்தினால் என்ன? என்று முதன் முதலில் வானொலிக்காக தினமலர் பத்திரிகை சார்பில் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் ஒலிப்பதிவு செய்து இலங்கை வானொலியின் தென்னிந்திய சேவையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின் சன் தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என திரு. ரமேஷ் பிரபா அவர்கள் முயற்சித்த போது வானொலியை என்னால் மறக்க இயலாது... வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் சேர்த்தே இதை யார் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போது என்னால் ஒத்துழைக்க இயலும் என்று நான் சொன்னேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்போது சென்னையில் புகழ் பெற்ற லலிதா நகைமாளிகையினர் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க முன் வந்தனர். லலிதாவின் பேராதரவோடு தொடர்ந்து 6 வருடங்களைக் கடந்திருக்கிறோம் என்பது மட்டுமல்லாது வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தென்கிழக்காசியாவிலேயே ஒலிபரப்பான, ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சி பாட்டுக்குப் பாட்டுத்தான் என்பது என்னை மிகவும் பெருமிதம் கொள்ள வைக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் அபிமானம் பெருகிக்கொண்டே வருகிறது. சகல தரப்பு மக்களும் இதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். பதிவு செய்கின்ற நேரத்தில் கூட்டம் அரங்குகளில் நிரம்பி வழிகின்றது. மக்களின் பேராதரவு சில சமயங்களில் என்னை திக்குமுக்காடச் செய்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த நிகழ்ச்சி மூலமாக என்னை இனம் காண்பதில் எனக்கிருந்த மனக்குறை நீங்கி, அதுவே எனக்கு மனநிறைவு தருவதாகவும்... இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியிலும் தமிழைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு ஊடகமாக இந்த பாட்டுக்குப் பாட்டு திகழ்வதைக் கண்டும் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் பரிபூரணமான மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கூட இலங்கை வானொலியின் பக்கம் ரசிகர்களை ஈர்க்கவைத்த எஸ்.பி. மயில்வாகனன் அவர்களோடு நீங்கள் பணிபுரிந்த பசுமையான நினைவுகளை ரசிகனுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஹமீது - மயில்வாகனன் அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் இணைந்த பிறகுதான், கடல் கடந்தும் கூட இலங்கை வானொலியின் பெருமை உயர்ந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழகத்திலே அன்றைக்கு இருந்த நான்கு கோடி மக்களும் விரும்பிக் கேட்ட ஒரே வானொலி என்ற அந்தஸ்திற்கு இலங்கை வானொலியை உயர்த்திவர் அவர்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வெறும் சினிமாப் பாடல்களை மட்டும் ஆதாரமாகக் கொண்ட ஒரு வர்த்தக சேவையிலே, வித்தியாசமான நிகழ்ச்சி வடிவங்கள், வித்தியாசமான அறிவிப்பு முறை என்ற மாற்றங்கள் மயில்வாகனன் என்பவரால்தான் இந்த அளவுக்குப் புகழ்பெற்றது.குறிப்பாக, சினிமா வட்டாரத்தில் மிகவும்புகழ் பெற்றவராக அவர் விளங்கினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அன்றைக்கு வெளிவந்த ஒரு திரைப்படத்தில்கூட மயில்வாகனன் அவர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.' நான் கண்ட சொர்க்கம்' என்ற திரைப்படத்தில் நடிகர் தங்கவேலு அவர்கள் எமலோகம் செல்வதாக வரும் காட்சியில் அவர் எமனோடு உரையாடும்போது அங்கிருந்த வானொலியில் மயில்வாகனின் குரல் கம்பீரமாக கணீரென்று ஒலிக்கும்.அப்போது அடடா மயில்வாகனன் இங்கே கூட வந்துவிட்டாரா?! என்று தங்கவேலு சொல்வார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மிகச்சிறிய வயதிலேயே வானொலியின் சிறுவர் மலரில் ஆரம்பித்து நாடகங்களிலெல்லாம் நிலையக்கலைஞனாக நடித்திருந்தாலும், 1967 ம் ஆண்டிலேதான் நான் அறிவிப்பாளனாக இலங்கை வானொலியில் எனது சேவையை ஆரம்பித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அந்த நேரத்தில் வயதில் மிகவும் மூத்தவரான மயில்வாகனன் அவர்கள் ஒரு நண்பனைப் போல மாணவப் பருவத்திலே எப்படி இருப்போமோ அவ்வளவு தூரம்அந்நியோன்னியமாகப் பழகினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னை மட்டுமல்லாமல் என்னோடு இணைந்த சக அறிவிப்பாளர்களையும் கூட தட்டிக்கொடுத்து வளர்த்துவிட்டவர் அவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வானொலி நிலையத்திற்கு வெளியில் நான் நாடகமன்றம் ஒன்றை ஆரம்பித்தபோது கூட எனக்கும் என் நண்பர்களுக்கும் காரியாலயமாகப் பயன்படுத்த தமது இல்லத்தையே வழங்கி எங்களை உற்சாகப் படுத்தினார்.தம்மையும் ஒரு இளைஞனாக மாற்றிக்கொண்டு எம்மை ஊக்குவித்த மாமனிதர் அவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்கள் குரல் இளமையின் ரகசியம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஹமீது- ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நான் நிற்காமல் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், தற்கால விஞ்ஞான மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்றும்... ஒரு மாணவ சிந்தனையோடு இன்றுவரை கற்றல் நிலையிலேயே நான் காணப்படுவதால் உள்ளத்தளவில் நான் இளைஞனாக இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அகத்தின் அழகு குரலில் தெரியும் என்பதால் முடிந்தவரையிலும் என்னுடைய அகத்தை சுத்தமாக வைத்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மொழியை நேசித்தல் என்பது பெற்ற தாயை நேசிப்பதற்கு சமம்.என்னைப்பொறுத்தவரையில் தாய்மொழி என்பது, தந்தை பேசிய மொழியோ அல்லது தாய் பேசிய மொழியோ அல்ல.குழந்தை முதன் முதலில் பேசிய மொழி.ஆகவே நான் முதன் முதலில் பேசிய மொழி தமிழ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதன் பால் அளவு கடந்த நேசம் வைத்துள்ளதால் வார்த்தைகளை கூட கடித்துக் குதறாமல் கேட்பவருடைய காதுகளை இம்சை செய்யாமல் அழகாக வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய ஒரு பக்குவம் வரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆகவே கால மாற்றங்களை கருத்தில் கொண்டு புதிய தொழில் நுட்ப யுக்தியோடு நிகழ்ச்சிகளை தயாரித்து மொழியை நேசித்து நாம் அறிவிப்புச் செய்கின்றபோது எவர் குரலும் எந்தவயதிலும் இனிமையானதாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒப்பிடுங்கள்......அறிவிப்பாளர் ஹமீது, நிகழ்ச்சி அமைப்பாளர் ஹமீது, நடிகர் ஹமீது, ரசிகன் ஹமீது ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எனக்கு மிகவும் பிடித்ததை முதலில் சொல்கிறேன். ரசிகன் ஹமீது ...எதனையும் நன்றாக ரசிக்கத் தெரிந்தவன் தான் நல்ல ரசனையோடு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லமுடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிறு வயது முதலே நான் ஒரு நல்ல ரசிகன். ரவிசங்கரின் சித்தார் என்றாலும், ஹரி பிரசாத் சௌரஷியாவின் புல்லாங்குழல் என்றாலும், கர்நாடக சங்கீதமென்றாலும், துள்ளிசையாக இருந்தாலும் எல்லா வகையான இசை வடிவங்களையும் நான் நன்றாக ரசிப்பேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வானொலி அறிவிப்பாளர் ஹமீது - வானொலி என்பது என்னுடைய தாய்வீடு. கலைத்துறையில் என்னை உருவாக்கி வளர்த்த வானொலிக்கு நான் மிகவும் கடமைப் பட்டவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நடிகர் ஹமீது - நான் வானொலிக்கு வருவதற்கு முன்னரே என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் 8 வயதில் முதன் முதலாக மேடையேறியிருக்கிறேன். நிறைய நாடகங்களை வானொலியிலும், மேடையிலும் நெறியாள்கை செய்து தயாரித்து இருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விசேஷமாக சொல்வதென்றால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதன் கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளன்று மூன்று நாடகங்களை தேர்வு செய்தார்கள்.அதில் முழுக்க முழுக்க பெண்களை வைத்து நெறிப்படுத்திய இராவணேஸ்வரனுடைய கதையை அரங்கு நிரம்பி வழிய யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே நான் மேடையேற்றியது, இன்றும் என் அடி மனதில் பசுமையாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மிக இளம் வயதிலேயே ஜான்சிராணியாக நான் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழகத்திலே வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள்வருவதற்கு முன்னரே நான் கட்டப்பொம்மனாகவும், கர்ணனாகவும் வேடமேற்று நாடகங்களில் நடித்திருக்கின்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்பு அறிவிப்பாளனாக மாறிய பிறகு கூட இசையும் கதையும் என்ற நிகழ்ச்சி எனக்கு மிதவும் வரவேற்பளித்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்னர் நானே தயாரித்த நாடகம் தான் கோமாளிகள். அது வானொலியில் 3 1/2 ஆண்டுகள் ஒலிபரப்பாகியது. அந்த வரவேற்பைப் பார்த்ததும் நண்பர் ஒருவர் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தபோது 1 மாதத்தில் அதன் படப்பிடிப்பை முடித்தோம். அதில் ஐயர் வேடத்தில் நான் நடித்திருந்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்னர் நீண்ட இடைவேளைக்குப்பின் இசைப்பயணம் என்றொரு திரைப்படத்துக்காக இலங்கையிலேயே படப்பிடிப்பை நடத்த தமிழகக் கலைஞர்கள் வந்த போது அப்துல் ஹமீதாக அதில் நடித்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்பு சூர்யோதயம் என்ற பெயரில் இத் திரைப்படம் வெளியானது. இதன் பிறகு நண்பர் கமலஹாசனுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க தெனாலியில் அப்துல் ஹமீதாகவே நடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்கள் பார்வையில் இலங்கை ரசிகர்கள் மற்றும் அவர்களோடு ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவங்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;...ஹமீது- இலங்கை ரசிகர்கள்துள்ளிசை, டப்பாங்குத்து போன்ற பாடல்களை விட நல்ல மெட்டமைப்புடன் கூடிய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;.யார் பாடுகிறார்கள் என்பதற்கும், யார் இசையமைத்திருக்கிறார்கள் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் தராமல்... நல்ல கற்பனை வளம் நிறைந்த தரமான பாடல்களை ரசிப்பதில் தொன்று தொட்டு இலங்கை ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.மறக்க முடியாத சம்பவம் என்று கூறும்போது, நிறைய பேசிக்கொண்டே போகலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆனாலும் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்கிறேன்.இது திருகோண மலையில் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியின் போது நடைபெற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெரும்பாலும் போடடியின் முன்பே ஓரளவு சுருதியுடனும் தாள ஞானத்துடனும் பாடுபவர்களை தேர்வு செய்துவிடுவோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆனால் யாருடன் யாரை போட்டியிட வைப்பது என்பதை இறுதி நேரத்தில்தான் மேடையில் தீர்மானிப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நிகழ்ச்சியின் இனிமைக்காக ஒரு ஆண் போட்டியாளரையும், ஒரு பெண் போட்டியாளரையும் அழைப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அப்போது ஆணை அவரது அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவர் ஒரு சோகப் பாடலை பாடினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறகு அந்தப் பெண்ணை அபிமான பாடலை பாடச்சொன்னேன். அவரும் ஒரு சோகப்பாடலையே பாடினார்.இரண்டுமே காதல் தோல்வியை பிரதிபலிக்கும் பாடல்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அதன் பிறகு குறிப்பிட்ட எழுத்துக்களை நான் சொன்ன போதும் காதல் தோல்விப் பாடல்களே மாறிமாறி ஒலித்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்ன பொருத்தம் இந்த பொருத்தம் ! என்றெல்லாம் நகைச்சுவையாக சொல்லிவிட்டு நான் தற்செயலாக திரும்பிப்பார்த்தபோது இருவர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறகு எனக்கே சங்கடமாகிப்போய் நிகழ்ச்சியை முடித்துவிட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறகு அந்த மேடையிலிருந்த அந்த ஊரைந்சேர்ந்த நண்பர்கள் என்னிடம் அவர்கள் இருவரும் காதலர்கள்.பல வருடம் காதலித்தும் வாழ்வில் இணையமுடியாமல் வேறு வேறு இடங்களிலே திருமணம் முடித்துக்கொண்டவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீண்ட நாட்களின் பின்னால் இந்த மேடையிலேஅவர்கள் உங்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் தங்களை சற்று ஆசுவாசப்படுத்தியிருக்கின்றார்கள் என்று சொன்னதும் அவர்களை எண்ணி என் நெஞ்சம் கனத்துப்போனது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியாவிலிருந்து வந்து உங்களை பெருமிதப்படுத்திய விமர்சனங்கள்?.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஹமீது- இலங்கை வானொலியில்ஒலிபரப்பாகிய ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தொடர்ந்து கேட்டிருக்கின்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு முறை வானொலி பேட்டிக்காக அவரை சந்தித்தபோது இலங்கை வானொலியிலிருந்து என்னை பேட்டிகாண வந்தததை விட உங்களுடைய நாடகங்களையும் வானொலியின் இதர நிகழ்ச்சிகளையும்மிகவும் விரும்பி ரசிக்கும் ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு பதிலளிக்க மிகந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று சொன்னது என்னை மிகவும் பூரிக்கச்செய்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் 'பெண்மணி' என்ற இதழில் என் ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்துவிடுகிறார். நான் மட்டுமல்ல சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதயா;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி அறிவிப்புலகில் ஹமீது - ராஜா என்றொரு ஆரோக்கியமான போட்டி ஒரு காலத்தில் நிலவியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தப் போட்டியின் மத்தியில் உங்கள் நட்பு எப்படி இருந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஹமீது- அதை போட்டி என்று சொல்ல மாட்டேன்.ஆரோக்கியமான நட்புதான் நிலவியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அவருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கும், எனக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் எனக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவிப்புப் பாணியில் பல விதமான வித்தைகளை அவர் கையாண்டார். அதில் வெற்றியும் பெற்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தாலும் குறுகிய காலத்தில் அவர் பிரபலமானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அவர் இருக்கின்ற இடத்தில் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நானும் அவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக பயணம் செய்திருக்கின்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரே நாளில் காலையில் அவருடைய நிகழ்ச்சி மாலையில் என்னுடைய நிகழ்ச்சி என்றெல்லாம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்னிலும் வயதில் மூத்தவரான அவருக்கும் எனக்குமிடையிலான நட்பு நன்றாகவே இருந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;------- ------ ------&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இணைப்புகள்....[ LINKS ]&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;1.&lt;a href="http://www.thamizmanam.com/"&gt;தமிழ் மணம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;2.&lt;a href="http://vaanoli.blogspot.com"&gt;&lt;span style="color:#006600;"&gt;வானொலி உலகம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;3..&lt;a href="http://www.vnmusicdreams.com"&gt;வசீகரனின் இசைக் கனவுகள்&lt;/a&gt;&lt;span style="color:#cc9933;"&gt; [ VN Music Dreams]&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.blogger.com/"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22558008-114014715543027880?l=udhayaarasigan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udhayaarasigan.blogspot.com/feeds/114014715543027880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22558008&amp;postID=114014715543027880&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114014715543027880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22558008/posts/default/114014715543027880'/><link rel='alternate' type='text/html' href='http://udhayaarasigan.blogspot.com/2006/02/blog-post.html' title='இசையமைப்பாளர் உதயா...அப்துல் ஹமீது...சந்திப்பு'/><author><name>UDHAYAA RASIGAN</name><uri>http://www.blogger.com/profile/09236030318990628387</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
